சென்ற மாதம் வரை களையிழந்து கிளை மட்டும் தாங்கி நின்ற மரங்கள்
இன்று கார் காலக் காற்றில் தலை அசைக்கின்றன
இளம் பச்சையாய் இன்று சிரிக்கும் இலைகள் இன்னும் சில மாதங்களில் நிறம் மாறும்...
முன்பனிக் காலத்தில் பழுப்பேறி மூப்படைந்து
பின்பனியில் பூமிக்கு அடியில் உறங்கச் செல்லும் ....
இளமையும், மூப்பும், மரணமும் மனிதர்க்கு மட்டும்தானா என்ன...மரங்களுக்கும் உண்டு...
ஆனால் மனிதர்க்கு மட்டும் ஏன் மரண பயம் ?