Wednesday 11 February 2009

எது எனது ?

வளர்ந்த வீட்டில் வாழவில்லை,
வாழும் வீடு சொந்தமில்லை...
சொந்தவீட்டில் வசிக்கவில்லை,
வசிக்கும் இடத்தில் எதுவும் எனதில்லை....
இருப்பிடம் பலமுறை மாறும்போது
சொந்தமென்று எதைச் சொல்வது ...
பிறந்ததும் புகுந்ததும் வைணவக் குடும்பமென்பதால்,
சொந்த வீடென்பது அந்தமில் பேரின்ப வீடு மட்டும்தானோ .... ?!