Wednesday 30 September 2009

பெண்களைத் தாக்காதோ பிரிவுத் துயர் ?!

சில நாட்களுக்கு முன் எனது youtube பட்டியலில் பாடல்கள் சேர்த்துக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் தோன்றியது....

சினிமா பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் ஒன்று, ஆண்-பெண் இருவரும் சேர்ந்து பாடும் 'டூயட்' களாக இருக்கின்றன - இல்லையென்றால் பிரிவில் அல்லது தோல்வியில் ஆண்கள் மட்டும் பாடுபவயாக இருக்கின்றன....

காதல் தோல்வியில் பெண்கள் மட்டும் பாடுவதாக அமைந்த பாடல்களை சல்லடை போட்டு தேடினாலும் தேறுவது கஷ்டம் - எனக்குத் தெரிந்தவரை 'கண்டுகொண்டேன்' படத்தில் 'எங்கே எனது கவிதை' ஒன்று தான் இந்த வகையில் அமைந்தது...

ஏன், பெண்கள் காதலில் தோற்றால் மட்டும் பாட மாட்டார்களா ? பெண்கள் தண்ணி அடிப்பது தான் தமிழ் சினிமா விதிகளுக்கு அப்பாற்பட்டது - சோகத்தில் பாடக் கூடவா முடியாது நம் கதாநாயகிகளால் ?!

நிஜத்தில் ஆண்கள் அளவுக்கு பெண்கள் பாதிக்கப் படுவதில்லையா அல்லது காட்டிக்கொள்வது இல்லையா ?
பெண்கள் நினைக்க மறக்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா ? !

No comments: