Sunday 1 April 2012

இன்றைய தினத்துக்கான சிறப்புப் பதிவு !

'பொதிகை' என்ற பெயரெல்லாம் சூட்டப்படாமல் வெறும் சென்னைத் தொலைக்காட்சியாக விளங்கிய காலம் தொட்டே அதற்கென்று சில பாரம்பரிய வழக்கங்கள் உண்டு... அதில் முக்கியமான ஒன்று 'ஒளியும் ஒலியும்' (அல்லது ஒலியும் ஒளியுமா - நினைவில்லை) பாடல்கள்...

அதில் பாடல்கள் தேர்வு யார் பொறுப்போ தெரியாது, அனால் கட்டாயமாக அந்த வாரத்தில் வரும் பண்டிகை சம்மந்தமாக ஒரு பாடலாவது இருந்தே ஆகும் பட்டியலில்... தீபாவளி, கிறிஸ்துமஸ், புனித வெள்ளி, இவற்றுக்கெல்லாம் தவறாமல் பாடல் உண்டு... !

'ஒ ஒ' பிரபலமாக இருந்த காலத்தில் துரதிஷ்டவசமாக அன்னையர் தினம், மகளிர் தினம், இன்ன பிற தினங்கள் எல்லாம் இந்தியாவில் பிரபலமாகவில்லை... இருந்திருந்தால் நிச்சயம் அதற்கும் பாட்டு வைத்திருப்பார்கள்.. (அதுவும் 'அம்மா' பாட்டுகளுக்கு தமிழ் சினிமாவில் பஞ்சமா என்ன...)


இன்று, கிராமங்களில் பஞ்சாயத்து டிவி பார்ப்பவர்களைத் தவிர வேறு எத்தனை பேர் பொதிகை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை... 'ஒ ஒ ' ஒளிபரப்பாகிறதா என்றும் எனக்கு தெரியாது... இருந்தாலும் பாரம்பரியத்தை விடக்கூடாது... அதுவும் இந்தியர்களுக்கு கலாச்சாரம் தான் எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியம் என்பதால், பொதிகையின் பாரம்பரியத்தைத் தொடரும் பொறுப்பை நான் மேற்கொள்கிறேன்...


ஆகவே, மக்களே, தமிழ் கூறும் நல்லுலகத்து சான்றோர்களே, உலகப் பதிவுகளில் முதல் முறையாக கேட்டு மகிழுங்கள் ... இன்றைய தினத்துக்கான சிறப்பு பாடல் ...




( தமிழ்ப் பதிவு போட்டு பல காலம் ஆனதால், நமக்கு உகந்த இந்த நல்ல நாளில் எதாவது எழுதாமல் விட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தின் பேரில் உருவான  பதிவு :) )





1 comment:

Anonymous said...

engal banbaatai neengal kochaibaduthugireergal.